வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறும் இம்மகோற்சவத்தில் ஆகஸ்ட் 26 ஆம் திகதி மஞ்சம் திருவிழாவும், அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 7 ஆம் திகதி மாம்பழத் திருவிழாவும் (சப்பரம்) நடைபெறும். தேர்த்திருவிழா செப்டம்பர் 9 ஆம் திகதி காலையிலும், தீர்த்தோற்சவம் செப்டம்பர் 10 ஆம் திகதி காலையிலும் நடைபெறும்.
அன்றைய தினம் மாலையில் கொடியிறக்கத்துடன் இந்த ஆண்டிற்கான வருடாந்த மகோற்சவம் நிறைவடையும்.